செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ் பல்கலை மாணவர்களுக்கான உழைத்த நலன் சேவையாளன்

யாழ் பல்கலை மாணவர்களுக்கான உழைத்த நலன் சேவையாளன்

1 minutes read

யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன்புரிக் கிளையின் முன்னாள் உதவிப் பதிவாளர் ஜெயக்குமார் கடந்த 27.12.2022 அன்று காலமாகியமை அறிந்து பெரும் துயரம் ஏற்படுகிறது.

யாழ் பல்கலைக்கழகத்தில் நலன்புரிக் கிளையில் உதவிப் பதிவாளராக பணியாற்றிய காலத்தில் இவர் ஆற்றிய பணிகள் மிகவும் முக்கியமானவை.

குறிப்பாக ஈழ இறுதிப் போர் தீவிரமடைந்த காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அன்று நலச் சேவை புரிவதில் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் என். சண்முகலிங்கன் அவர்களின் எண்ணங்களுக்கு செயல் வடிவங்களில் பணி செய்த அதிகாரி இவர்.

வன்னி மாணவர்களுக்கான உணவுத் திட்ட யோசனையை துணைவேந்தர் முன்வைத்து அதற்கான அனுமதியை துணைவேந்தர் என். சண்முகலிங்கன் வழங்கினார்.

“அத்தனையும் எம் பிள்ளைகளுக்காகவே” என்று அன்று துணைவேந்தர் வழங்கிய சிந்தனையை அவருடன் களத்தில் நின்று செயற்படுத்தியவர் யோகேஸ்வரன் ஜெயக்குமார்.

முள்வேலி முகாங்களில் உள்ள மாணவர்களை மீட்கும் சந்தர்ப்பத்திலும் துணைவேந்தருடனும் மாணவர் ஒன்றியத்துடனும் இரவு பகல் பாராமல் அவர் செய்த பணிகளை பல தலைமுறைகள் மறவாது.

வழக்கமாக மகாபொல, பேசரி வழங்கும் பல்கலைக்கழக நலன்புரிக் கிளையாக இல்லாமல் போரால் இடர்பட்ட நிலத்தில் தகுந்த தேவைகளை யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்காக ஆற்றிய மனிதாபிமானத்தின் நலன் சேவையாளர் இவர் என்றால் மிகையில்லை..

பாலேந்திரம் பிரதீபன்,
முன்னாள் செயலாளர் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More