செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை விபத்தில் தந்தையும் மகனும் காவு!

விபத்தில் தந்தையும் மகனும் காவு!

1 minutes read

வாகன விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் கட்டுவன – ஊருபொக்க வீதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த தந்தை 66 வயதானவர் என்றும், மகனுக்கு 26 வயது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் வேகந்தவல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

சம்பவத்தில் உயிரிழந்த தந்தை திக்வெல்ல பொலிஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக கடமையாற்றி வந்தார் என்று தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More