செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கத்தி முனையில் யாழ். கோப்பாயில் கொள்ளை

கத்தி முனையில் யாழ். கோப்பாயில் கொள்ளை

0 minutes read

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கத்தி முனையில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான  பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்  உள்ள வீடொன்றில் நள்ளிரவு வேளை கூரிய ஆயுதங்களுடன் புகுந்த நான்கு பேர் அடங்கிய கொள்ளை கும்பல் வீட்டில் இருந்தோரை கத்தி முனையில், மிரட்டி 10 பவுண் தங்க நகைகள், ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் 3 கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதனை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More