முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் மறைவுக்காக தேவாலயங்கள், மடங்கள் மற்றும் நிறுவனங்களில் அரைக்கம்பத்தில் திருத்தந்தையின் கொடியேற்றி ஆலயங்களில் துக்க மணியை அடிப்போம் என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவர்களின் அடக்கச்சடங்கு திருப்பலி இன்று வத்திக்கான் புனித பேதுருவானவர் பேராலயத்தில் நடைபெறவுள்ளது.
அவரின் அடக்கச் சடங்கு திருப்பலியுடன் இணைந்து எமது பங்கு ஆலயங்களிலும் மடங்களிலும் மற்றும் நிறுவனங்களிலும் வசதியான நேரங்களில் ஆன்மா இளைப்பாற்றி திருப்பலி ஒப்புக்கொடுப்போம்.
அத்துடன் ஆலயங்களிலும் மடங்களிலும் மற்றும் நிறுவனங்களிலும் அரைக்கம்பத்தில் திருத்தந்தையின் கொடியை ஏற்றி, இறுதிச் சடங்குகள் வத்திக்கான் நேரம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் போது இலங்கை நேரம் பிற்பகல் 2 மணிக்கு ஆலயங்களில் துக்கமணியை அடிப்போம் என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.