செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோட்டா ஏன் விரட்டப்பட்டார்? – விமல் விளக்கம்

கோட்டா ஏன் விரட்டப்பட்டார்? – விமல் விளக்கம்

1 minutes read

“கோட்டாபய ராஜபக்சவின் தன்னிச்சையான முடிவுகளும், அவரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுமே அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து விரட்டப்பட்டமைக்குப் பிரதான காரணம்.”

– இவ்வாறு முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கோட்டாபய, மக்கள் வழங்கிய ஆணைக்குச் சிறிதளவும் மதிப்புக் கொடுக்காமல் தான்தோன்றித்தனமாகவே செயற்பட்டார்.

அவரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை நான் தட்டிக் கேட்டபடியால் எனது அமைச்சுப் பதவியும் பறிபோனது.

கோட்டாபயவின் இப்படியான செயற்பாடுகள் இறுதியில் ராஜபக்ச குடும்பத்துக்கே தலைக்குனிவை ஏற்படுத்தியது மட்டுமன்றி ஒட்டுமொத்த ராஜபக்சக்களும் பதவிகளிலிருந்து விரட்டப்பட்டார்கள்.

ராஜபக்சக்களின் கட்சியுடன் நாம் இனிமேல் கூட்டணி அமைக்கவேமாட்டோம்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More