செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வீட்டில் கஞ்சா செடிகள்: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிக்கினார்!

வீட்டில் கஞ்சா செடிகள்: சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிக்கினார்!

0 minutes read

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

350 கஞ்சா செடிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவல் ஒன்றுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் நேற்றிரவு விசேட அதிரடிப் படையினர் சோதனைகளை நடத்தினர்.

இதன்போது, 350 கஞ்சா செடிகள் மற்றும் நவீன உலோக ஸ்கேனர் இயந்திரம் என்பன மீட்கப்பட்டன.

சந்தேகநபரை மொனராகலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More