செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உண்டியல் குலுக்கிப் பணம் சேகரித்து மைத்திரியிடம் ஒப்படைத்த கலைஞர்!

உண்டியல் குலுக்கிப் பணம் சேகரித்து மைத்திரியிடம் ஒப்படைத்த கலைஞர்!

0 minutes read

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 கோடி ரூபா நட்டஈட்டுத் தொகையை செலுத்துவதற்காக சகோதர மொழிக் கலைஞரான சுதத்த திலகசிறி நேற்று கொழும்பு – கோட்டையில் உண்டியலைக் குலுக்கிப் பணம் சேகரித்தார்.

அதன்போது, திரட்டப்பட்ட 1,810 ரூபா பணத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அவர் கையளித்தார்.

நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 10 கோடி ரூபா நட்டஈட்டை செலுத்தும் அளவுக்குத் தன்னிடம் சொத்துக்கள் இல்லை எனவும், அதனால் பணத்தை தனது நண்பர்களிடம் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More