0
கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று பகல் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், காரில் பயணித்த நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.