செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனாதிபதி தலைமையில் இன்று மீண்டும் சர்வகட்சிக் கூட்டம்!

ஜனாதிபதி தலைமையில் இன்று மீண்டும் சர்வகட்சிக் கூட்டம்!

1 minutes read

நாடாளுமன்றத்தை அங்கத்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் மீண்டும் இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாலை 4 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், கடந்த டிசம்பர் 13 ஆம் திகதி சர்வகட்சிக் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது கலந்துரையாடப்பட்ட, நல்லிணக்க முன்னேற்ற வேலைத்திட்டம் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட்டுக் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடு இன்று எட்டப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More