செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணிலிடம் மண்டியிடத் தயாரில்லை! – வசந்த சூளுரை

ரணிலிடம் மண்டியிடத் தயாரில்லை! – வசந்த சூளுரை

1 minutes read

“ரணில் அரசின் முன் மண்டியிடத் தயாரில்லை. நாட்டு மக்களின் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை. எமது போராட்டம் தொடரும்.”

– இவ்வாறு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே சூளுரைத்தார்.

வசந்த முதலிகேவுக்கு எதிராகக் கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட 3 வழக்குகளிலும் அவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கருத்து வெளியிடுகையலேயே அவர் மேற்கண்டவாறு சூளுரைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக மக்கள் மீது வரிகள் சுமத்தப்பட்டுள்ளன. அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தீரவில்லை. எனவே, இந்த அரசின் முன் மண்டியிட நாம் தயாரில்லை. இது ஆரம்பம் மட்டுமே. மக்கள் சக்தி என்னவென்பதை விரைவில் காட்டுவோம்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More