செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மது போதையில் இளைஞர் படுகொலை! – நால்வர் கைது

மது போதையில் இளைஞர் படுகொலை! – நால்வர் கைது

0 minutes read

முல்லைத்தீவு, உடையார்கட்டுப் பகுதியில் 21 வயது இளைஞர் துரவிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 4 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சம்பவம் தொடர்பில் மாறுபட்ட தகவல்களை விசாரணையில் தெரிவித்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.

உயிரிழந்த இளைஞர் உட்பட 5 பேர் மது அருந்தியுள்ளனர். இதன்போதே இளைஞரை இழுத்துச் சென்று துரவில் தள்ளி விழுத்தியுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

5 பேர் ஒன்றாக மது அருந்தினர் எனவும், திடீரென இளைஞர் ஒருவன் தன்னை விடுமாறு கூக்குரலிடும் சத்தம் கேட்டது எனவும் அயலவர்கள் விசாரணையின்போது குறிப்பிட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More