செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் நாளை முக்கிய நிகழ்வுகள்! – ரணிலும் பங்கேற்பு

யாழில் நாளை முக்கிய நிகழ்வுகள்! – ரணிலும் பங்கேற்பு

1 minutes read

‘யாழ்ப்பாண கலாசார மையம்’ கையளிப்பு, இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வுகள் என்பன நாளை சனிக்கிழமை மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இவற்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

காலை 9 மணிக்கு யாழ்ப்பாண கலாசார மையம் கையளிப்பு நடைபெறும். இந்த நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் கலந்துகொள்ளவுள்ளார். அவருடன் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலையும் பங்கேற்கவுள்ளார்.

இதன் பின்னர் மாலை 5 மணிக்கு இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் நடைபெறும். இதன்போது வடக்கின் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுதந்திர நாள் ஊர்த்திப் பவனி நடைபெறும். இறுதியாக இரவு 7 மணிக்கு முற்றவெளியில் இசை நிகழ்வு நடைபெறும்.

இந்த இரு நிகழ்வுகளும் ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More