செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்பு – பல்கலை மாணவர்கள் போராட்டம்

யாழில் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்பு – பல்கலை மாணவர்கள் போராட்டம்

2 minutes read

யாழ்ப்பாணத்தில் இன்று தேசிய சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பல்கலைகழகத்துக்கு முன்பாக ஒன்றுகூடிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் முன்னதாக பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள பிரதான கொடிக் கம்பத்தில் கறுப்புக் கொடியை மாணவர்கள் ஏற்றினர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும், பொருளாதாரம் பின்னடைவை அடைந்துள்ள இந்த நேரத்திலும் பெருந்தொகையான பணத்தைச் செலவிட்டு தேசிய சுதந்திர தின விழாவை இரண்டாவது தடவையாக யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்க வேண்டிய தேவை ஏன் என்று போராட்டத்தின் போது மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

தேர்தலுக்குப் பணம் இல்லை எனக் கூறி சுதந்திர தினத்துக்குப் பணத்தைச் செலவளிப்பது எதற்கு என்றும் மாணவர்கள் கேள்வி எழுப்பினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More