செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வாழ வழியின்றித் தவிக்கும் மக்கள்! – ரிஷாத் கவலை

வாழ வழியின்றித் தவிக்கும் மக்கள்! – ரிஷாத் கவலை

1 minutes read

நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதால் மக்கள் வாழ வழியின்றித் தவிக்கின்றனர் எனவும், அவர்களின் கஷ்டங்களைப் போக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், புத்தளம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

“மின்சாரக் கட்டணம் இலங்கையில் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக அறிவித்துள்ளார்கள். இவ்வாறான அழுத்தங்களால் மக்கள் எப்படி வாழ்க்கை நடத்துவது என்று திண்டாடுகின்றனர்.

கடந்த ஆட்சியாளர்களின் தவறுகள், பிழையான வழிநடாத்தல்கள் மற்றும் அநியாயங்களினாலேயே எமது நாடு இன்று குட்டிச்சுவராகி, அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. அவ்வாறானவர்களைச் சேர்த்துக்கொண்டே ஜனாதிபதி ஆட்சியை நடத்துகின்றார். அவர்களை பகைக்காமல் பாதுகாக்கும் நிலையை ஏற்படுத்தி ஜனாதிபதி பல தவறுகளை மேற்கொள்கின்றார். இது நாட்டுக்குச் செய்கின்ற பாரிய துரோகமாகும்.

பொருளாதாரத்தை மீட்டெடுக்க மக்கள் மீது வரிகளை சுமத்துகின்றனர். கடந்த கால ஆட்சியாளர்கள் மேற்கொண்ட தவறுகளால் ஏற்பட்ட நஷ்டத்தை மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முயற்சிப்பது பாரிய அநியாயமாகும். எனவே, மக்கள் மீது சுமைகளைச் சுமத்துவதை விடுத்து, கடந்த காலத்தில் ஆட்சி செய்தவர்களிடமிருந்து பெற வேண்டியதைப் பெற்று மக்களை பாதுகாக்க வேண்டும்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More