செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தைப் பெற்றார் ரணில்!

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தைப் பெற்றார் ரணில்!

1 minutes read

நேற்று (20) நள்ளிரவுக்குப் பின்னர், எந்த நேரத்திலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப் கிடைக்கப்பெற்றுள்ளது. அரசமைப்பின் 70 (1) (அ) உட்பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அரசமைப்பின் 70 (1) (அ) உறுப்புரையின் பிரகாரம், தற்போதைய நாடாளுமன்றம் முதல் முறையாக கூடுவதற்கு நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து இரண்டு ஆண்டுகள் 6 மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில், நாடாளுமன்றத் தீர்மானம் மூலம் கோராத பட்சத்தில் ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது.

நாட்டின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். எனினும், கொரோனா தொற்றுநோய் காரணமாக, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி குறித்த தேர்தல் நடைபெற்றது.

இதன்படி, ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியான கோட்டாபாய ராஜபக்சவின் தலைமையில், ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு அந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி கூட்டப்பட்டது.

குறித்த முதல் அமர்வு இடம்பெற்று நேற்று (20) நள்ளிரவுடன் இரண்டு வருடங்களும் ஆறு மாதங்களும் நிறைவடைந்துள்ளன.

எனவே, கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலின் பின்னர் அரசமைப்பு ரீதியாக ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அரசமைப்பின் 70 (1) (அ) உறுப்புரையின் பிரகாரம் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More