செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மீண்டும் நில அதிர்வு!

இலங்கையில் மீண்டும் நில அதிர்வு!

1 minutes read

புத்தல, வெல்லவாய பகுதிகளில் இன்று முற்பகல் மீண்டும் சிறு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்று புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இது ரிக்டர் அளவீட்டு கருவியில் 3.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.

வெல்லவாயவை அண்மித்த பகுதியில், 7 கிலோமீற்றர் ஆழத்தில், இலங்கை நேரப்படி முற்பகல் 11.44 மணியளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்று புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரியுள்ளது.

இதேவேளை, கடந்த 10 ஆம் திகதி இலங்கையின் தென்கிழக்கு நகரங்களில் 3.0 மெக்னிடியூட் அளவில் சிறிய நில அதிர்வு ஏற்பட்டது. எனினும், அதனால் எந்த ஆபத்துக்களும் ஏற்பட்டிருக்கவில்லை.

“இது ஓர் அதிர்வு மட்டுமே, பூகம்பம் அல்ல” என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More