செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சொகுசு வீடொன்றில் சூதாட்டம் – 11 பேர் கைது

சொகுசு வீடொன்றில் சூதாட்டம் – 11 பேர் கைது

0 minutes read

சொகுசு வீடொன்றில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், சூதாட்டம் நடத்திய இடத்திலிருந்து 73 ஆயிரத்து 940 ரூபாவையும் பொலிஸார் கைப்பற்றினர்.

இந்தச் சம்பவம் பிலியந்தல – தெல்தர பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களில் வீட்டு உரிமையாளரான பெண்ணும், அவரது உறவு முறை மகளும் மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும், மகளும் அடங்குகின்றனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்களைக் கெஸ்பாவ நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பிலியந்தல பொலிஸார் மேலும் கூறினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More