செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞர் பாண்டிருப்பில் கைது

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞர் பாண்டிருப்பில் கைது

1 minutes read

ம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள வாகன புகை பரிசோதனை நிலையத்துக்கு முன்னால் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிய இளைஞர் இன்று (26) மாலை கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்று தேடலில் ஈடுபட்டபோதே கல்முனை விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.

கைதானவர் பெரிய நீலாவணை பகுதியை சேர்ந்த 35 வயதானவர் ஆவார்.

சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டபோது அவரிடமிருந்து 1 கிராம் 80 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டோருக்கு நீண்ட காலமாக  தொலைபேசியின் ஊடாக தொடர்புகொண்டு ஐஸ் போதைப்பொருளை விற்பனை செய்து  வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட நபரையும் அவரிடம் இருந்து கைப்பற்றிய சான்றுப் பொருட்களையும் பெரிய நீலாவணை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு,  விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More