செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொலிஸாரிடம் 24 மணிநேரத்துக்குள் அறிக்கை கோரும் மனித உரிமை ஆணைக்குழு!

பொலிஸாரிடம் 24 மணிநேரத்துக்குள் அறிக்கை கோரும் மனித உரிமை ஆணைக்குழு!

1 minutes read

கொழும்பில் தேசிய மக்கள் சக்தி நேற்று நடத்திய ஆர்ப்பாட்டத்தைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, நேற்று உயர் அழுத்த நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.

கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூனியன் பிளேஸ் பகுதியில் இந்தப் பேரணி இடம்பெற்ற போது, அதனைத் தடுக்கும் வகையில் பொலிஸார் உயர் அழுத்த நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.

எவ்வாறாயினும், குறித்த பகுதியில் எதிர்ப்புப் பேரணிகளை நடத்தத் தடை விதித்து நீதிமன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்பட்டிருக்கவில்லை என்பதை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன் குறித்த அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More