செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் குடும்பமே சடலங்களாக மீட்பு! – பொலிஸார் தீவிர விசாரணை

வவுனியாவில் குடும்பமே சடலங்களாக மீட்பு! – பொலிஸார் தீவிர விசாரணை

2 minutes read

தந்தை, தாய் மற்றும் சிறுவர்களான இரண்டு பிள்ளைகள் என நால்வர் அடங்கிய குடும்பம் இன்று காலை வீட்டில் சடலங்களாக மீட்கப்பட்டமை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா, குட்செட் வீதி , அம்மா பகவான் ஒழுங்கையில் பிள்ளைகளும் தாயும் படுக்கையிலும், தந்தை தூக்கில் தொங்கிய நிலையிலும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியாப் பொலிஸாருக்குத் தகவல் தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதே பகுதியைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது – 42) வீட்டின் விறாந்தைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது – 36), பிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது – 09), கௌ.கேசரா (வயது – 03) ஆகியோர் உறங்கிய படியும் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியாப் பொலிஸார், மீட்கப்பட்ட சடலங்களை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் வவுனியாவில் பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More