புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிறையிலிருந்து தப்பியோட முயன்ற கைதி சுட்டுக் கொலை!

சிறையிலிருந்து தப்பியோட முயன்ற கைதி சுட்டுக் கொலை!

0 minutes read

சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த கைதி ஒருவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

கேகாலை சிறைச்சாலையில் சமையல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த கைதி இன்று அதிகாலை சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த கைதி கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மெல்சிறிபுர பகுதியைச் சேர்ந்த 35 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.

பராமரிப்பு வழக்கு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந் சந்தேகநபரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More