செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோர விபத்தில் குடும்பஸ்தர் பரிதாபச் சாவு!

கோர விபத்தில் குடும்பஸ்தர் பரிதாபச் சாவு!

1 minutes read

வாகன விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் புத்தள, பெல்வத்தை சீனி தொழிற்சாலைக்கு செல்லும் வழியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சீனி தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்களை ஏற்றி வந்த லொறி, முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி சுமார் 50 மீற்றர் தூரம் வரை லொறியால் மோட்டார் சைக்கிள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 40 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தை பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் புத்தள வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று புத்தள வைத்தியசாலையின் வைத்தியரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

42 வயதுடைய லொறியின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இருப்பினும் அப்பிரதேசத்தில் உள்ள மக்களினால் குறித்த லொறி தாக்கப்பட்டு சேதமாக்கப்ட்டுள்ளது என்று புத்தள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புத்தள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More