செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பல கொலைகளின் சந்தேகநபர் ‘பூரு மூனா’ கைது!

பல கொலைகளின் சந்தேகநபர் ‘பூரு மூனா’ கைது!

0 minutes read

ரவிந்து சங்க என்றழைக்கப்படும் பூரு மூனா, நீதிமன்றத்தில் சரணடையச் சென்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர், அவிசாவளை நீதிவான் நீதிமன்றத்துக்குச் சரணடையச் சென்ற போது, பொலிஸார் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்களால் கைது செய்யப்பட்டார்.

அண்மைக்காலமாக இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுக்காக தேடப்பட்டு வந்தார் எனக் கூறப்படும் அவர், அவிசாவளை நீதிவான் நீதிமன்றில் சரணடைவதற்காகச் சட்டத்தரணி ஒருவருடன் சென்றிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவிசாவளை நீதிவான் நீதிமன்றத்துக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகவே பொலிஸார் வாகனத்தை நிறுத்தி அவரைக் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில் அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சமிந்த அத்துகோரள, அவரது உயிருக்கு உடனடி ஆபத்து இருப்பதாகவும், அவர் கொல்லப்படுவார் என அஞ்சுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தனது வாடிக்கையாளருக்கு வாழ்வதற்கான உரிமை இருப்பதாகக் குறிப்பிட்ட சட்டத்தரணி, அவர்; நீதிமன்றத்தில் சரணடைய விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

இதையடுத்து அவரை உடனடியாக நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அவிசாவளை நீதிவான் ஜனக சமரசிங்க உத்தரவிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More