செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நிழல் உலக தாதாக்கள் ஹரக்கட்டா, குடு சலிந்து ஆகியோரின் பாதுகாப்பு அறிக்கை கோரும் நீதிமன்றம்!

நிழல் உலக தாதாக்கள் ஹரக்கட்டா, குடு சலிந்து ஆகியோரின் பாதுகாப்பு அறிக்கை கோரும் நீதிமன்றம்!

0 minutes read

தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்ரமரத்ன என்ற “ஹரக்கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிகா குணரத்ன அல்லது “பாணந்துறை குடு சலிந்து” ஆகியோரின்  பாதுகாப்பு  தொடர்பில்  அறிக்கையை ஒரு வாரத்துக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் திலின கமகே குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளருக்கு நேற்று (21) உத்தரவிட்டுள்ளார்.

இரண்டு தரப்பினர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி  றியன்சி அரசகுலரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிடுமாறு நீதிமன்றில்  கோரிக்கையை முன்வைத்தார்.

இதனைக் கருத்திற்கொண்ட நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More