செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாமியார் கொலை! – மருமகன் கைது

மாமியார் கொலை! – மருமகன் கைது

0 minutes read

காணித் தகராறில் மாமியாரை மருமகன் குத்திப் படுகொலை கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டார்.

அவரை மருமகன் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் என்று கம்பஹா தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று பிள்ளைகளின் தாயான லியனகே மேரி ஸ்வர்ணா என்பவரே தனது மருமகனால் கொலை செய்யப்பட்டார்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் மருமகனான 43 வயதுடைய நபர் கம்பஹா தலைமையகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More