செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மதுபோதையில் தன்னை தாக்கிய கணவனைக் குத்திக் கொன்ற மனைவிக்கு விளக்கமறியல்!

மதுபோதையில் தன்னை தாக்கிய கணவனைக் குத்திக் கொன்ற மனைவிக்கு விளக்கமறியல்!

0 minutes read

மது போதையில் தனது மனைவியை தொடர்ந்து தாக்கியதாக  கூறப்படும்  ஒருவர்,  அவரது  மனைவியால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பொலன்னறுவை மாவட்டத்தின் புலஸ்திபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான உயிரிழந்தவர் மது அருந்திவிட்டு தனது 21 வயது மனைவியை தொடர்ச்சியாக தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறே மது அருந்திவிட்டு மீண்டும் ஒரு தடவை தாக்கி காயங்களை ஏற்படுத்தியதையடுத்து பெண் தற்காப்புக்காக கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் கைதுசெய்யப்பட்டு பொலன்னறுவை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More