செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் குடும்பஸ்தர் கொடூரப் படுகொலை!

யாழில் குடும்பஸ்தர் கொடூரப் படுகொலை!

1 minutes read

யாழ்ப்பாணம், மீசாலை – புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச் சங்கப் பராமரிப்பாளர் ஒருவர் மனநோயினால் பாதிக்கப்பட்ட இளைஞரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஆனைக்கோட்டை தெற்கு, கூழாவடியைச் சேர்ந்த நி.நாகச்செல்வன் என்ற குடும்பஸ்தரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மீசாலை – புத்தூர் சந்திப் பகுதியில் வசித்து வரும் 20 வயதான இளைஞர் ஒருவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மனநல சிகிச்சைக்காகக் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று குறித்த இளைஞர் வைத்தியசாலையில் இருந்து தப்பி புத்தூர் சந்தியிலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனால், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இளைஞரைப் பராமரித்து வந்த நோயாளர் நலன்புரிச் சங்கத்தைச் சேர்ந்தவரும், இளைஞரின் உறவினர் ஒருவருமாக இளைஞரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக இளைஞரின் வீட்டுக்கு வந்திருந்தனர்.

அப்போது, வீட்டுக்கு அருகில் உள்ள ரயில் கடவையில் அமர்ந்திருந்த குறித்த இளைஞரோடு நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் உரையாடியதோடு, இளைஞரின் வீட்டுக்கும் அவரோடு சென்றுள்ளார்.

இதன்போது இளைஞரின் உறவினர் ஓட்டோவோடு வீதியோரத்தில் காத்திருந்தார்.

இந்நிலையில் வீட்டுக்குள் இருந்து இளைஞர் மட்டும் வெளியே வந்து மீண்டும் ரயில் கடவையில் அமர்ந்து கொண்டார்.

வீட்டுக்குள் சென்ற நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளரைக் காணாத இளைஞரின் உறவினர் அவரது தொலைபேசிக்கு அழைப்பெடுத்தார்.

நீண்ட நேரமாக அழைத்தும் பதில் கிடைக்காத்தால், ரயில் வீதியில் அமர்ந்திருந்த இளைஞரிடம் சென்று வினவியுள்ளார்.

இதன்போது, “பராமரிப்பாளரை வீட்டு முற்றத்தில் வைத்து அலவாங்கால் குத்திக் கொலை செய்துவிட்டேன்” என்று இளைஞர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வீட்டு முற்றத்துக்குச் சென்று பார்த்த போது குறித்த நலன்புரிச் சங்கப் பராமரிப்பாளர் முகத்தில் பலத்த காயங்களோடு சடலமாகக் கிடந்துள்ளார். சடலத்துக்கு அருகில் கத்தி ஒன்றும் காணப்பட்டுள்ளது.

இதையடுத்து சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இளைஞரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞர், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More