செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இரண்டு ஆண்கள் மர்ம மரணம்!

இரண்டு ஆண்கள் மர்ம மரணம்!

1 minutes read

இருவேறு இடங்களில் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் பொலிஸ் பிரிவில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரவுன்ஸ் ஹோம்ஸ், ரயில் நிலைய வீதி பகுதியில் உள்ள வீடொன்றின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஹட்டன் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எனினும், மரணத்தில் சந்தேகம் நிலவுகின்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய வீதியின் பிரவுன்ஸ் ஹவுஸில் வசிக்கும் 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கந்தானை பகுதியில் இயங்கி வந்த தசைப் பிடிப்பு நிலையம் ஒன்றில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சுமார் 42 வயதுடைய திருமணமானவர் எனத் தெரியவந்துள்ளது.

கந்தானை நாகொட பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் தசைப்பிடிப்பு நிலையத்துக்குச் சென்றுள்ளார். பின்னர் குறித்த நபர் அங்கு உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக அவர் இறந்துள்ளார் என்று தசைப்பிடிப்பு நிலையத்தினர் தெரிவித்துள்ள போதிலும் மரணத்தில் சந்தேகம் நிலவுகின்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள கந்தானை பொலிஸார், சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More