செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ ஆதிக்கம்

தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ ஆதிக்கம்

0 minutes read

தமிழர்களுடைய தொல்லியல் அடையாளங்கள் எங்கெல்லாம்  இருக்கின்றதோ அங்கெல்லாம் பௌத்த மதமும் தொல்லியல் திணைக்களமும் ஆதிக்கத்தை செலுத்துகின்றது என நாகதம்பிரான் ஆலய குரு சிவசிறி காந்தக் குருக்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அன்னை பூபதியின் நிணைவு வணக்க நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் கண்ட வாறு தெரிவித்துள்ளார்

தமிழர்களாகிய நாங்கள் எமது விடுதலையை நோக்கி விடுதலைக்காக பல வடிவங்களிலே போராடி இருக்கின்றார்கள் ஆனாலும் அதற்கான முற்றுப்புள்ளியை அடைய முடியாத ஒரு நிலையில் இன்று தமிழ் தேசம் உள்ளது

என்று குறிப்பிட்ட அவர் இப்போது  தமிழர்களின் தொல்லியல் அடையாளங்கள் எங்கெங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கங்கெல்லாம் தொல்லியல் திணைக்களமும்  பௌத்தமும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது குறிப்பாக வெடுக்கு நாறிமலை குருந்தூர் மலை போன்ற இடங்களிலே விக்கிரகங்களை அழித்து அவற்றை உடைத்து சிதைத்து வந்திருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More