செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொடிகாமம் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் சாவு!

கொடிகாமம் விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் சாவு!

0 minutes read

யாழ்., தென்மராட்சி, கொடிகாமம் – எருவன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சாரதா வீதி, சங்கத்தானை, சாவகச்சேரியைச் சேர்ந்த 25 வயதான கோ.கஜீபன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.

படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்றார்.

விபத்து தொடர்பான விசாரணைகளைக் கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More