செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

1 minutes read

இடி, மின்னலுடன் கூடிய மழைக்கான சிவப்பு எச்சரிக்கை 16 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய,  மற்றும் வடமேல் மகாணங்களிலும்  யாழ்ப்பாணம், கிளிநொச்சி,மன்னார்,அநுராதபுரம், காலி மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையை எதிர்பார்க்கலாம்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், அநுராதபுரம், புத்தளம், குருணாகல், மாத்தளை,  கம்பஹா,கோகலை,கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு  திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More