செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவர் | பெரமுன

மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவர் | பெரமுன

1 minutes read

எமது மக்கள் பலத்தை வெளிப்படுத்துவோம். மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் மீண்டும் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள். மே தின கூட்டத்தில் இருந்து செயற்பாட்டு ரீதியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர்  சாகர காரியவசம் தெரிவித்தார்.

மே தின கூட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்; மேலும் குறிப்பிட்டதாவது,

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தினால் மே தின கூட்டத்தை நடத்த முடியாமல் போனது.2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் கூட்டத்தை நடத்த முடியவில்லை.அதே போல் 2022 ஆம் ஆண்டு முறையற்ற போராட்டத்தினால் மே தின கூட்டத்தை நடத்த முடியவில்லை.

பாரிய போராட்டத்துக்கு மத்தியில் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.மே தின கூட்டத்தை நடத்துவதற்கான வாய்ப்பை சகல அரசியல் கட்சிகளுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

எமது மக்கள் பலத்தை நாளைய தினம் கெம்பல் மைதானத்தில் இடம்பெறும் மே தின கூட்டத்தில் வெளிப்படுத்துவோம்.மக்களாணையுடன் ராஜபக்ஷர்கள் வெகுவிரைவில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவார்கள்.

மே தின கூட்டத்தில் இருந்து செயற்பாட்டு ரீதியான எமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பொதுக்கூட்டங்களை இனி முன்னெடுப்போம் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More