செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “எம்மை அடக்க நினைக்க வேண்டாம்! நீதி கோரி தொடர்ந்தும் பயணிப்போம்!!”

“எம்மை அடக்க நினைக்க வேண்டாம்! நீதி கோரி தொடர்ந்தும் பயணிப்போம்!!”

1 minutes read

“எம்மை அடக்க நினைக்க வேண்டாம். ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்” – என்று மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்தார்.

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ். ஊடக அமையத்தால் இன்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஊடகவியலாளர்களது பிரச்சினை தொடர்ந்த வண்ணமே உள்ளன. ஊடகவியலாளர்களின் கருத்துக்களைக் காது கொடுத்து கேட்கக் கூட இந்த அரசு தயங்குகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விட பாரதூரமான, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை மீண்டும் கொண்டுவர ஆட்சியாளர்கள் முயல்கின்றார்கள்.

இந்தச் சட்டத்தைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. அதாவது எமது சக ஊடகவியலாளர்கள் வீதிகளில் சுடப்பட்ட போது நாம் பேனாவை மட்டுமே கையில் கொண்டு அலைந்தோம். இந்த அட்டூழியங்களைப் பேனா கொண்டு தான் சர்வதேசத்துக்குச் சொன்னோம்.

நாங்கள் புதிதாக ஒன்றும் கேட்கவில்லை. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை வேண்டும்; நீதி வேண்டும். ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதுவரை படுகொலை செய்யப்பட்ட எம் ஊடகர்களின் பாதையில் நாமும் பயணிப்போம்.” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More