செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யானை தாக்கி காதலி பலி! – காதலன் படுகாயம்

யானை தாக்கி காதலி பலி! – காதலன் படுகாயம்

0 minutes read

காட்டு யானை தாக்கி யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் பண்டாரவளை – கொஸ்லாந்தை – மேல் தியலும பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, காட்டு யானையின் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் கொஸ்லாந்தை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காதல் ஜோடியான இருவரும், தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியிருந்த நிலையில், இன்று அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் – வாரியபொல பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரும், மாத்தறை பகுதியைச் சேர்ந்த 23 வயது யுவதியுமே குறித்த பகுதிக்குச் சுற்றுலா சென்ற நிலையில் இந்தச் சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கொஸ்லாந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More