செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

3 minutes read

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்று (18) தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் யாழ்ப்பாணத்தில் அதன் தலைமை அலுவலகத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறப்பட்டது.

இறுதிப் போரில் புதுமாத்தளனில் தனது கணவரைப் பலி கொடுத்த திருமதி தக்சாயினி அருள்நேசயோகநாதன் அஞ்சலிச் சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தியதைத் தொடந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், பொதுச்செயலாளர் ம.கஜேந்திரன், துணைப் பொதுச்செயலாளர் சண்.தயாளன், பொருளாளர் க.கேதீஸ்வரநாதன் ஆகியோர் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

ஏராளமானோர் முள்ளிவாய்க்கால் கஞ்சியை உணர்வுடன் அருந்திச் சென்றமையைக் காணமுடிந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More