செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வீதி விபத்துக்கள்: ஒரே நாளில் 10 பேர் சாவு!

வீதி விபத்துக்கள்: ஒரே நாளில் 10 பேர் சாவு!

1 minutes read

இலங்கையில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் நேற்று (30) மாத்திரம் மூன்று வயது குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா – நீர்கொழும்பில் பாதசாரிகள் இருவரை லொறி மோதியதில் இருவர் சாவடைந்துள்ளனர். மூன்று வயது ஆண் குழந்தையும், அவரின் 29 வயதான தந்தையுமே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

கண்டி – கம்பளையில் பஸ் மோதியதில் 60 வயதான பெண் ஒருவர் சாவடைந்துள்ளார். பஸ்ஸை விட்டு இறங்கி வீதியைக் கடக்க முற்பட்ட வேளை அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குருநாகல் – குளியாப்பிட்டியில் காரும் ஓட்டோவும் நேருக்கு நேர் மோதியதில் ஓட்டோ சாரதி சாவடைந்துள்ளார். 42 வயதான குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

புத்தளம் – ஆனமடுவ, பெரியகுளம் பகுதியில் வான் மோதியதில் பாதசாரி ஒருவர் சாவடைந்துள்ளார். 68 வயதான வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பு – வெள்ளவத்தையில் தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் சாவடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 28 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரம் – ஸ்வஸ்திபுர பகுதியில் வான் விபத்துக்குள்ளானதில் 76 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும், இரண்டு சிறுவர்களும் காயமடைந்துள்ளனர்.

களுத்துறை – பாணந்துறையில் ஓட்டோ கவிழ்ந்ததில் இருவர் சாவடைந்துள்ளனர். 33 வயதான ஓட்டோ சாரதியும், அதில் பயணித்த 41 வயதான பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

மொனராகலை – வெல்லவாயவில் ஹயஸ் வான் மோதியதில் பாதசாரி ஒருவர் சாவடைந்துள்ளார். 72 வயதான வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More