செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கேரள கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

கேரள கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

0 minutes read

கேரள கஞ்சாவுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர் என்று தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை – அனுராதபுரம் சந்தியில் இருந்து ஓட்டோவில் கேரள கஞ்சா பொதியை ஏற்றிக்கொண்டு செல்லும் போது 96 ஆம் கட்டை பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு அருகில் வைத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் முள்ளிப்பொத்தானை- 10 ஆம் கொலனியில் வசித்து வரும் நான்கு பிள்ளைகளின் தந்தையான திருகோணமலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் முத்தலிப் மாஜித் (வயது 54) எனத் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரிடம் ஒரு கிலோ பத்து கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது எனவும், சந்தேகநபர் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தம்பலகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More