செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வற்றாப்பளை பொங்கலில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

வற்றாப்பளை பொங்கலில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

1 minutes read

வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் இலட்சக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை நடைபெற்றது.

முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நேற்று அதிகாலை நிறைவடைந்ததும் அங்கிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் பெருமளவு பக்தர்கள் கலந்துகொண்டனர். தூக்குக் காவடி, பறவைக் காவடி, பாற்செம்பு, தீச்சட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை மக்கள் மேற்கொண்டனர்.

கடந்த ஆண்டுகளில் ஆலயத்துக்கு பக்தர்கள் வருகை தருவதில் சிக்கல் நிலைமைகள் இருந்த நிலையில் இம்முறை அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More