வத்தளைப் பிரதேசத்தில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
இ.பி.கசுன் சம்பத் என்ற நபரே காணாமல்போயுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் வத்தளைப் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள நிறுவனமொன்றில் காவலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார்.
இவ்வாறு பணிபுரிந்து கொண்டிருந்த அவர் கடந்த 12ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்குப் பின்னர் திடீரென மாயமானார் என்று வத்தளைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த நபரை யாராவது கண்டால் உடனடியாகப் பொலிஸ் நிலையத்துக்கு அல்லது 076 668 9959/ 077 219 0251 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.