கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் இன்று (28) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காரில் பயணித்தவர்களை இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த 38 வயதான நபர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.