செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சி துப்பாக்கிச்சூடு: இருவர் கைது!

கிளிநொச்சி துப்பாக்கிச்சூடு: இருவர் கைது!

0 minutes read

கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் இன்று பகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உதயநகர் பகுதியில் காரில் பயணித்தவர் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

அதில் காரில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர் எனும் குற்றச்சாட்டில் திருநகர் பகுதியைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்திய உள்ளூர் துப்பாக்கியையும், துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்காகப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
………..

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More