செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நடாஷா எதிரிசூரியவுக்குப் பிணை!

நடாஷா எதிரிசூரியவுக்குப் பிணை!

0 minutes read

மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் நடாஷா எதிரிசூரியவுக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிற்பகல் பிணை வழங்கியுள்ளது.

இதேவேளை, அவரை ஜூலை 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று முற்பகல் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியுள்ளது.

சந்தேகநபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பத்தின் அடிப்படையில் சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More