செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!

வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு!

0 minutes read

வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

காலி – அம்பலாங்கொடை பிரதேசத்தில் இன்று (13) காலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அப்பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய எஸ்.பி. லசந்த என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு 10 மணிக்குப் பின்னர் வீட்டிலிருந்து காணாமல்போன குறித்த இளைஞர், இன்று காலை 6 மணியளவில் வீட்டுக்கு 200 மீற்றர் தொலைவில் வெற்றுக்காணியொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More