செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மீண்டும் பிடிபட்ட இந்திய மீனவர் விடுதலை!

மீண்டும் பிடிபட்ட இந்திய மீனவர் விடுதலை!

1 minutes read

கடந்த ஆண்டு கைதாகி ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையில் விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர் இந்த ஆண்டு மீண்டும் கைதாகியிருந்த நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் யாழ். மேல் நீதிமன்றால் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக் கடற்பரப்புக்கள் அத்துமீறி மீன்பிடித்தமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்களில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. விடுதலையான மீனவர் மீண்டும் இந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையில் விதிக்கப்பட்ட இரண்டு 6 மாத கால சிறைத்தண்டனையையும் ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டும் என்றும், மீளவும் அத்துமீறிய குற்றத்துக்காக 8 மாத சிறைத்தண்டனையுமாக 14 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து இந்திய மீனவரால் யாழ். மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டது. விசாரணையையடுத்து அவருக்கு 3 மாதகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் கடந்த மார்ச் மாதம் கைதானதிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 5ஆம் திகதி விடுவிக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More