செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

பொலிஸ் திணைக்களத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!

0 minutes read

இலங்கையில் கடந்த வருடம் மே மாதம்  9  ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க பொலிஸ்  திணைக்களம் தவறியதன் காரணமாக இலங்கைப் பிரஜைகளின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து   பொலிஸ் திணைக்களத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள்  மனு இன்று புதன்கிழமை (19) உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்ற வன்முறைகளைத் தடுக்கவோ அல்லது அதற்கு எதிராக போதுமான நடவடிக்கைகளை எடுக்கவோ தவறியதன் மூலம் இலங்கை பொலிஸ் திணைக்களம் மக்களின் மனித உரிமைகளை மீறியுள்ளதாகக் கூறி ‘உயிர் உரிமை’ மனித உரிமைகள் மையத்தினால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அரச சட்டத்தரணி ஷமிந்த விக்ரமவினால் முன்வைக்கப்பட்ட ஆரம்ப ஆட்சேபனைகளை பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.துரைராஜா, யசந்த கோட்டகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More