செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளி முருகானந்தா கல்லூரியில் SJC87 அமைப்பினரின் சந்திப்பு

கிளி முருகானந்தா கல்லூரியில் SJC87 அமைப்பினரின் சந்திப்பு

2 minutes read

யாழ் பரியோவான் கல்லூரி எனப்படும் சென்ஸ்ஜோன்ஸ் கல்லூரியில் 87ஆவது ஆண்டில் கல்வி கற்ற மாணவர்களின் SJC87 அமைப்பினர் பயனாளி மாணவர்களுடன் நடாத்திய சந்திப்பு கிளிநொச்சி முருகானந்தா கல்லூரியில் இன்று (19.07.2023) இடம்பெற்றது.

முருகானந்தா கல்லூரி அதிபர் திருமதி சூரியகுமாரி இராசேந்திரம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வை கவிஞரும் ஆசிரியருமான தீபச்செல்வன் நெறிப்படுத்தினார்.

இதன்போது SJC87 அமைப்பினர் இலங்கையில் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்த முன்னெடுக்கும் நடவடிக்கைள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது.

இலங்கையில் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் 730பேர் வருடம் தோறும் பயன்பெற்று வருவதாகவும் இதனால் பெரும் இடர்பாடுகளில் உள்ள மாணவர்கள் கல்வியை தொடர்வதாகவும் நிகழ்வை நெறிப்படுத்திய தீபச்செல்வன் குறிப்பிட்டார்.

புலம்பெயர் தேசத்தில் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் தமது உழைப்பை தாயக மாணவர்களின் நலனுக்காக SJC87 அமைப்பு உறவுகள் வழங்கி வருகின்றமை போற்றுதலுக்குரியது என அதிபர் திருமதி சூரியகுமாரி இராசேந்திரம் தெரிவித்தார்.

நிகழ்வில் SJC87 அமைப்பின் கொடையாளர்கள் தமது பயனாளி மாணவர்களை சந்தித்து அவர்களின் கல்வி நடவடிக்கை மற்றும் நிலை குறித்து அறியும் வகையில் தனித்தனியாக உரையாடல்களை மேற்கொண்டனர்.

SJC87அமைப்பின் இணைப்பாளர்கள்,  டேகலா முருகேசு, சோபிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டதுடன், மிகவும் நெகிழ்வான முறையில் அமைந்த இந் நிகழ்வில் SJC87 அமைப்பின் தலைவர் மிதிலன் நன்றியுரையை நிகழ்த்தினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More