Friday, September 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ரணிலிடம் தமிழர்கள் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்! – அநுர கருத்து

ரணிலிடம் தமிழர்கள் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்! – அநுர கருத்து

0 minutes read

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அரசியல் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது என்று தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.

இந்திய விஜயத்துக்கு முன்னர் தமிழ்க் கட்சிகளின் எம்.பிக்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திய சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினர்.

அவர் மேலும் கருத்துரைக்கையில்,

“தான் ரணில் ராஜபக்ச அல்ல ரணில் விக்கிரமசிங்கதான் என்று தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஜனாதிபதி கூறியது நகைப்புக்குரியது. தற்போது ரணில் – ராஜபக்ச அரசுதான் ஆட்சியில் உள்ளது. ராஜபக்சக்கள் பட்டாளத்தின் ஆசியில்தான் ஜனாதிபதி கதிரையில் ரணில் இருக்கின்றார். எனவே, ராஜபக்சக்களின் குணாதிசயங்கள் ரணிலிடம் உண்டு. அவரிடம் தமிழ் மக்கள் – அவர்களின் பிரதிநிதிகள் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.” – என்றார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More