செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி

திருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி

0 minutes read

மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளவக்குளம் பகுதியில்  விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரக்கட்டையில் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த விபத்தில் தோப்பூர், 7 ஆம் வட்டாரம், இக்பால் நகரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் முஹம்மது அன்சார் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More