செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம் அரசமைப்புக்கு முரண்! – உயர்நீதிமன்றம் அறிவிப்பு

உள்ளூராட்சி திருத்தச் சட்டமூலம் அரசமைப்புக்கு முரண்! – உயர்நீதிமன்றம் அறிவிப்பு

0 minutes read

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பிரதேச சபைகள், நகர, மாநகர சபைகள் மற்றும் மாகாண சபைகள் தொடர்பான திருத்தச் சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உயர்நீதிமன்றின் இந்த வியாக்கியானத்தைச் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்தார்.

குறித்த திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றில் விசேட பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தச் சட்டமூலத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More