செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டு. வாகரையில் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன் கைது

மட்டு. வாகரையில் சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன் கைது

1 minutes read

மட்டக்களப்பு வாகரையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய இளைஞன்  ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (08) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 15 வயதும் 8 மாதம் கொண்ட சிறுமி ஒருவரை 18 வயதுடைய இளைஞனை காதலித்து வந்த நிலையில், சிறுமியை 3 மாத கர்ப்பமாக்கியதையடுத்து அவர்கள் இருவரையும் அவர்களது பெற்றோர் ஒன்றினைத்து வைத்ததையடுத்து இருவரும் கணவன் மனைவியாக குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக  சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவல் பிரகாரம் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயது இளைனுக்கு எதிராக கடந்த முதலாம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து, அவர்கள் இருவரும் ஒழிந்திருந்த நிலையில் சிறுமியை கர்ப்பமாக்கிய  18 வயது  இளைஞனை  சம்பவதினமான இன்று செவ்வாய்க்கிழமை (8) கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட  இளைஞனுக்கு எதிராக சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மோற்கொண்ட குற்றசாட்டின் கீழ் வழக்கு தாக்குதல் செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More